யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கான விமான சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தினச் சேவையாக இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாய் வீதியிலுள்ள வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ளன.
ஆயினும் அந்தச் சேவைகள் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இந்த நிலையில் பலரதும் கோரிக்கைகளுக்கு அமைய பயணிகளுக்காக இந்த சேவை இன்னும் விரிவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி 27 ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை விமான சேவையில் ஈடுபடும் நிறுவமே எமக்கு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை நாம் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். -என்றார்.